சித்தாண்டி நலன்புரி அமைப்பினால் மாபெரும் விளையாட்டு விழா - அழைப்பு

சித்தாண்டி 01, மாவடிவேம்பு 02 ஆகிய பிரதேசங்களை தமது  தளமாகக் கொண்ட பிரதேச அபிவிருத்தி அமைப்பான சித்தாண்டி நலன்புரி அமைப்பானது (Sittandy Walfare Organization - SWO) மாபெரும் விளையாட்டு நிகழ்வு ஒனறினை எதிர்வரும் 16.04.2013 அன்று  வியாகர் கிராமம் நாககன்னி அம்மன் ஆலய மைதானத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
அமைப்பின் தலைவர் ஆ.தேவராசா அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வினை நடாத்துவதற்கு பரிசுப்பொருட்கள், பணஉதவிகளை வழங்கி உதவுவதுடன், அணைவரையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உதவிகள் செய்ய விரும்புவர்கள் சித்தாண்டி நலன்புரி அமைப்பின் ஆலோசகரும், கிராம சேவகருமான பூ.அருள்நாதன் அவர்களைத் தொடர்புகொள்வதனுடாகவோ உதவிகளை வழங்கமுடியும்.

செல்லிடப்பேசி இலக்கம் :- 0094772357242, 009475256452




Previous Post Next Post