இலங்கையில் சந்திர கிரகணத்தை காணும் வாய்ப்பு

இன்று தோன்றும் சந்தர கிரகணத்தை இலங்கையிலும் காணும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த வருடத்தில் இலங்கையருக்கு தென்படும் முதலாவது சந்திர கிரகணம் இதுவென நவீன தொழிநுட்பத்திற்கான ஆதர் சீ கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது.
இன்றிரவு 11.34 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த சந்திர கிரகணம் மறுநாள் அதிகாலை 01.37 வரை தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகள் பலவற்றிலும் இந்த சந்திர கிரகணம் தென்படும் என ஆதர் சீ கிளார்க் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post