கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறப்பற்று வடக்கு கோட்டமட்ட விளையாட்டப் போட்டி நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. கோறளைப்பற்று வடக்கு கோட்டக் கல்வி அதிகாரி ச.பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்குடா வலயகக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிகந்தராசா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
இந்தப் போட்டிகளில் வாகரை தமிழ் மகா வித்தியாலயம் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றது.