ஈரளக்குளத்தில் எதிர்வரும் 25 திகதி நடமாடும்சேவை

நிறைவான இல்லம் வளமான தாயகம் 'கிராமம் கிராமமாக வீடு வீடாக' தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2014 மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டம் எனும் தொணிப்பொருளில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ரோகன பசில் ராஜபக்ஷ அவர்களின் அனுசரணையுடன் ஏறாவூர்பற்று

 பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் வழிகாட்டிலின் கீழ் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் தலைமையில் ஈரளக்குள அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் எதிர்வரும் 25.04.2014ம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 வரை நடைபெறவிருக்கின்றது.

நடமாடும் சேவை ஊடாக பிறப்பு சான்றிதழ்கள், இறப்புசான்றிதழ்கள் திருமணப்பதிவு மற்றும் தேசிய அடையாளட்டை போன்ற பதிவுகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் வருகைதரவுள்ளதுடன் மற்றும் சமூகசேவை திணைக்களம், காணி அபிவிருத்தி திணைக்களம், சுகாதார திணைக்களம், சிறுகைத்தொழில் அபிவிருத்தி திணைக்களம், கால்நடை திணைக்களம், கமநல திணைக்களம்,பெண்கள் சிறுவர் அபிவிருத்தி திணைக்களங்களும் வருகைதரவுள்ளதனால் பொதுமக்களின் தேவைகளை உடன்பெற்றுக்கொள்ள கூடியவகையில் சேவைகளை வழங்கவுள்ளனர்.

Previous Post Next Post